விசித்திரமானவன் THE ODDBALL 64-0531 ஞாயிற்றுக்கிழமை காலை, மே 31, 1964 Pine Lawn Trailer Park, பிரெஸ்காட், அரிசோனா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 64-0531 - விசித்திரமானவன் நாம் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, இன்று காலை நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, வழியிலே அவர் எங்களுடனே பேசினபடியினால், எங்கள் இருதயங்கள் எங்களுக்குள்ளே பற்றி எரிந்தது என்று சொல்லக்கூடும். இந்தச் சிறந்த வாய்ப்பு எங்கள் வழியில் வந்ததற்காகவும், உமது பிள்ளைகளாகிய இந்த மக்களுடன் நாங்கள் ஒன்றுகூடி, இந்த ஐக்கியத்தின் நேரங்களை அனுபவிக்கவும் கிடைத்ததற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பரலோக பிதாவே, நாங்கள் பயணம் செய்து, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, மற்றவர்களைச் சந்திக்கும்போது, உமது ஆசீர்வாதங்கள் எங்கள்மேல் தங்கியிருக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். 2 இன்று காலை இங்கே நிலவுகிற இந்தச் சிறந்த கிறிஸ்தவ சூழ்நிலையின் ஒவ்வொரு சாட்சிக்காகவும், வழியிலே நீண்ட காலமாக இருக்கிற இவர்கள் எல்லாரோருக்காகவும், வாழ்வது என்றால் உண்மையாகவே என்ன என்பதைப் பார்ப்பதற்காக யோர்தானைக் கடந்து வந்திருக்கிற இந்த வாலிபனுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்களும் ஒரு காலத்தில் அந்தப் பக்கம் இருந்தோம் என்பதை அறிந்து, கர்த்தாவே, நாங்கள் அனைவரும் இதை மிகவும் போற்றுகிறோம். ஆனால் இனி அந்தப் பழைய வாழ்க்கை இல்லை. அது... அது எகிப்திலே பின்னுக்கு விடப்பட்டுவிட்டது. 3 நாங்கள் உமது வார்த்தையை வாசித்து, நாங்கள் அனைவரும் விசுவாசிக்கிற இந்த மகத்தான தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு சில வார்த்தைகளைப் பேசும்போது, எங்கள் ஐக்கியத்தை நீர் ஆசீர்வதிக்கும்படி இப்போது நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த ஆராதனையைத் தொடர, எங்கள் இருதயங்களுக்கு அதை ஆசீர்வதித்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 4 சகோதரன் லியோ, சகோதரன் ஜீன் மற்றும் யாத்திரைக்காரர்களே, இந்த வளாகத்தில் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை நானே வந்து பார்ப்பது எனக்குக் கிடைத்த சிறந்த பாக்கியங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன். அது ஒரு... அந்தச் சிறிய ஓடையைக் கடந்து வந்து, இந்த இடத்தை பார்த்தபோது நான் ஆசீர்வதிக்கப்பட்டேன். ஒருமுறை சகோதரன் லியோ நாடாக்களை (tapes) உருவாக்கிக் கொண்டிருந்தபோது, நாடா தயாரிப்பதை விடவும் மேலான ஒன்று வாழ்க்கையில் அவருக்கு நிச்சயமாக இருக்கிறது என்று நான் அவரிடம் சொன்னேன். நாடா தயாரிப்பது நாம் செய்ய வேண்டிய ஒரு காரியம்தான், அது எங்களை ஆசீர்வதித் திருக்கிறது, ஆனால் வேறொரு காரியமும் இருக்கிறது. நாம் அனைவரும் வெவ்வேறு காரியங்களைச் செய்வதற்காக உருவாக்கப் பட்டிருக்கிறோம். 5 இன்று காலை இங்கே வந்து, இங்கே அமைந்திருக்கும் இந்தச் சிறிய எருசலேமைப் பார்ப்பது, இன்று காலை நாங்கள் வரும்போது இதை, கோஷேன் (Goshen) என்று அழைத்தேன் என்று நினைக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், கோஷேன் அவர்கள் தொழுது கொண்ட இடங்களில் ஒன்றாகும், கூடாரம் போடப்பட்ட முதல் இடங்களில் ஒன்றாகும். பழைய நண்பர்களையும், புதியவர்களையும் சந்திப்பதற்கும், நமக்கு ஒதுக்கப்பட்ட இந்த நேரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், நான் வெறுமனே... நீங்கள் இங்கிருந்து வெளியேற விரும்பவே மாட்டீர்கள் என்பது போலத் தோன்றுகிறது. உங்களைப் பிடித்து வைத்துக் கொள்ள விரும்புகிற ஏதோ ஒன்று இருக்கிறது. நீங்கள் ஏன் இங்கே தங்க விரும்புகிறீர்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. புரிகிறதா? ஏதோ ஒன்று உங்களைப் பற்றிக்கொள்கிறது. 6 நான் உட்கார்ந்து, என் உதடுகளைக் கடித்துக் கொண்டு, என் கால்களை ஆட்டிக் கொண்டு, நான் கத்திவிடாதபடி என்னைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அளவுக்கு, இனிமையானதொரு ஆராதனையிலும் ஐக்கியத் திலும் இதற்கு முன்பு நான் இருந்ததாக நான் நம்பவில்லை; அந்தப் பழைய பாடல்கள் எப்படிப் பாடப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ, அதே விதத்தில் பாடப் பட்டதை நான் கேட்டேன், அது ஆவியிலே பாடப்பட்டது. பவுல் சொன்னார், "நான் பாடினால், ஆவியோடு பாடுவேன்." இப்போது, ஆவியானவர் என்றால் நம் குரல்வளை கிழிய கத்துவது என்று நான் கற்பனை செய்யவில்லை. கிறிஸ்துவின் ஆவியானவர் அன்பாகவும், சாந்தமாகவும், சமாதானமாகவும் இருந்து, நம் ஆத்துமாக்களுக்கு ஏதோ ஒன்றைக் கொண்டு வந்து, நம்மைப் போஷிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பாடல்கள் பாடப்பட வேண்டிய விதம் அதுதான் என்று நான் நினைக்கிறேன். 7 ஒரு நோக்கத்திற்காக, கிறிஸ்துவின் நோக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட மக்களாகிய உங்களோடு இங்கே இருப்பது; நான் சொல்லக் கூடிய அநேக காரியங்கள் இருக்கின்றன, ஆனால் நேரம் என்னை அனுமதிக்காது. நான் வந்தது... நான் நினைத்தேன், "சரி, நான் ஓடிச்சென்று சகோதரன் லியோவையும், அங்கிருக்கும் சபையையும், அவருடைய வருகைக்காகக் காத்திருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பகுதியையும், இங்கே தங்கியி ருக்கும் மணவாட்டியின் ஒரு பகுதியையும் சந்திப்பேன்." 8 உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து உங்களை நீங்கள் எப்படிப் பிரித்துக்கொண்டு, இப்படி வாழ்வதற்காக இங்கே வந்திருக் கிறீர்கள். அந்தச் சிறிய ஓடையைக்கூட நான் நினைத்துப் பார்த்தேன், நீங்கள் இப்போது யோர்தானின் இப்பக்கத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் இங்கே தேசத்திற்குள் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு யாத்திராகமமாக, உலகத்திலிருந்து ஒரு வெளியேறுதலாக, நீங்கள் ஒன்றாகக் கூடி, உங்கள் மனசாட்சியின் கட்டளைப்படி தேவனைத் தொழுதுகொள்ளக்கூடிய ஒரு இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். 9 ஒரு ஜனநாயகமாக, ஒரு தேசமாக, அதற்காகத்தான் நாம் நிற்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தொழுதுகொள்ளலாம் என்கிற அதே காரியத்திற்காகத்தான் நாம் நிற்கிறோம். இது போன்று இன்னும் அநேகம் நமக்கு இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. புரிகிறதா? அதுதான் சரி. உலகம் அவர்கள் இடத்தில் இருக்கட்டும், தேவனுடைய மக்கள் அவர்கள் இடத்தில் இருக்கட்டும் என்று அனுமதிக்கிற, இதை நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் இது. 10 எனக்கு நிச்சயமாக... நான் "ஆமென்" என்று சொல்லிவிட்டு வாசலை விட்டு வெளியேறினாலும், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இங்கே வண்டி ஓட்டிக்கொண்டு வருவது, அல்லது இது போன்ற ஒரு சூழ்நிலையில் உட்கார என் பிள்ளைகளை அழைத்து வருவது எனக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் சொல்வேன். ஏனெனில், எப்போதுமே சூழ்நிலைதான் முடிவுகளைக் கொண்டுவருகிறது. 11 நீங்கள் ஒரு விதையை அங்கே நிலத்தில் போடலாம். அந்த விதை எவ்வளவுதான் முளைக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், அதை அங்கே வைத்தாலும், அது உயிர்வாழ அதற்கு ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும். புரிகிறதா? அந்தச் சூரியன் ஒரு குறிப்பிட்ட ஆற்றலுக்கு வர வேண்டும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் கொண்டுவர வேண்டும். ஒரு முட்டைக்கு ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும், இல்லையென்றால் அது பொரிக்காது. அது எவ்வளவு கருவுற்றிருந்தாலும், அதற்கு அந்தச் சூழ்நிலை இருக்க வேண்டும். 12 இது போன்ற ஒரு குழுவில், இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் கிறிஸ்தவர்கள் பொரிக்கப்படுகிறார்கள், மறுபடியும் பிறக்கி றார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்படிப் பட்ட சூழ்நிலையில்தான் நான் பிறந்தேன். குளிர்ந்த உலகம், மிஷன் களங்கள் மற்றும் இது போன்ற எங்கு நான் சென்று சந்தித்தாலும், நான் நின்று என் கண்களை மூடிக்கொண்டு இந்தச் சூழ்நிலையை நினைத்துப் பார்க்க முடியும். 13 இது நான் சிறு வயது பிரசங்கியாக இருந்து, புதிதாகத் தொடங்கிய காலத்தை எனக்கு நினைவூட்டுகிறது. வீடு வீடாகச் சந்திப்பதற்கு எங்களுக்குச் சிறிய குழுக்கள் இருந்தன. உலகத்தின் காரியங்களிலிருந்து நாங்களும் எங்களைப் பிரித்துக்கொண்டோம் (அதுதான் இன்று கிறிஸ்துவை நேசிக்கிற விதமாக என் இருதயத்தை மாற்றியது), அங்கே எங்களால் ஒன்றாக வசிக்க முடிந்தது. 14 வேதம் சொன்னது போல, "சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது! அது ஆரோனுடையத் தாடியிலிருந்து, அவனுடைய அங்கிகளின் விளிம்புகள் வரைக்கும் வடிகிற அபிஷேக தைலத்தைப் போல இருக்கிறது" என்று நான் விசுவாசிக்கிறேன். 15 இன்னும் அநேகம் சொல்லலாம். நான்... ஒருவேளை நான் போன பிறகு, அது என்ன என்பதைப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு விளக்குவார். நான் மதியம் முழுவதும் இங்கேயே தங்கியிருந்து, உணவையும் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இங்கே உட்கார்ந்து நீங்கள் பாடுவதைக் கேட்க விரும்புகிறேன். புரிகிறதா? நீங்கள் பாடுவ தையும், பேசுவதையும், சாட்சி சொல்வதையும் கேட்பது அவ்வளவு மேன்மையானது. 16 இன்றிரவு என் மகள் பட்டம் பெறுகிறாள். அல்லது, இன்றிரவு பட்டமளிப்பு விழா ஆராதனை இருக்கிறது, நான் அவசரமாகத் திரும்ப வேண்டும். அது, அந்தப் பட்டமளிப்பு விழா ஆராதனை இருக்கிறது என்பது, நேற்று இரவு வரை எனக்குத் தெரியாது. நான் சற்று வேலையாக இருக்கிறேன், அதைக் கவனிக்கவில்லை. 17 சகோதரன் லியோ மற்றும் சகோதரன் ஜீன் கீழே வரும்போது அவர்களைச் சந்தித்துப் பேசி, இங்கே இருப்பதற்கான நேரத்திற்காக நான் ஏங்கிக்கொண்டிருந்தேன், உண்மையில் ஆச்சரியப்பட்டேன். மக்கள் சொல்ல நான் கேள்விப்பட்டேன், "அங்கே அவர்களுக்கு ஒரு அழகான ட்ரெய்லர் குடியிருப்பு (trailer court) இருக்கிறது. அவர்கள் ஒரு பக்கத்தில் இருக்கி றார்கள். உலகம் மறுபக்கத்தில் இருக்கிறது. இந்தப் பக்கத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க் கைகளும் காரியங்களும் இருக்கின்றன." 18 நான் நினைத்தேன், "நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். அது உண்மையில் என்ன என்பதைப் பார்க்க விரும்புகிறேன்." நீங்கள் அனைவரும் இங்கே இருப்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. 19 நான் வேதாகமத்திலிருந்து ஒரே ஒரு வசனத்தை மட்டும் வாசிக்க விரும்புகிறேன். இந்த ஒரு வசனத்தை வாசிப்பதே முழுமையான ஆராதனையாக அமையும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இங்கே வரும்போது, நான் சொல்லலாம் என்று நினைத்த சில குறிப்புகளை நான் வைத்திருக்கிறேன். எனக்குச் சில நிமிடங்களே எடுக்கும். பின்னர் நான் இப்போது உணருவதற்கு ஏற்றார் போல இந்தக் குறிப்புகளைச் சொல்ல விரும்புகிறேன். இரண்டு கொரிந்தியர் புஸ்தகத்தில், 12-ம் அதிகாரம், 11-ம் வசனத்தில், இதை நான் வாசிக்க விரும்புகிறேன். பவுல் பேசுகிறார். மேன்மைபாராட்டுகிறதினால் புத்தியீனனாயிருக் கிறேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப் படுத்தினீர்கள்; நான் ஒன்றுமில்லை யென்றாலும், பிரதான அப்போஸ்தலருக்கும் நான் குறைந்த வனல்லவே; ஆதலால், உங்களால் மெச்சப்பட வேண்டியதாயிருந்ததே. 20 இதை ஒரு மையக்கருத்து (text) என்று அழைத்தால்.. பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நாம் வெறுமனே ஒரு வேத பகுதியை வாசிப்பது சரியாக இருக்காது. அவர், அதைத்தான் அவர் புசிக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் தேவாவியினால் அருளப்பட்டது, அது நேரத்திற்குப் பொருத்தமானது. அது ஒருபோதும் முடிவதில்லை. அது ஒரு சங்கிலியைப் போன்றது. அது தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. வேதம் ஒருபோதும் முடிவதில்லை. 21 இதை வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்தச் சிறிய இடத்தைப் பற்றி நினைத்தபோது, பவுல், "நான் புத்தியீனனாயிருக்கிறேன்" (I have become a fool) என்று சொல்வது என் நினைவுக்கு வந்தது. புரிகிறதா? பாருங்கள், ஒரு அப்போஸ்தலன் சொல்வதற்கு அது மிகவும் விசித்திரமான ஒரு விஷயம். "நான் ஒரு புத்தியீனனாகிவிட்டேன்." ஒரு புத்தியீனன் (fool) என்பவன் உண்மையில் சரியான மன நிலையில் இல்லாத ஒரு நபர். அப்படியிருக்க, இந்த அப்போஸ்தலன், "நான் ஒரு புத்தியீனனாகிவிட்டேன்" என்று எப்படிச் சொல்ல முடியும்? 22 பின்னர் இந்தக் குழுவைப் பற்றி நினைக்கும்போது, சந்தேகமேயில்லை, மறு பக்கத்தில் உள்ள மக்களின் கண்களுக்கு, நீங்கள் ஒரு புத்தியீனனாக மாறிவிட்டீர்கள். இன்று நாம் அழைப்பது போல நீங்கள் ஆகியிருக்கிறீர்கள்: விசித்திரமானவர் (The Oddball). மக்கள் உங்களைப் பற்றி அப்படி நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. நினைவில் கொள்ளுங்கள், மறுபக்கத்தில் உள்ளவர்களும் விசித்திரமானவர்கள்தான். புரிகிறதா? 23 எனவே-எனவே நீங்கள் யாருக்காவது ஒரு பைத்தியமாக (fool) இருக்க வேண்டும், ஆகையால் நான் கிறிஸ்துவுக்காகப் பைத்தியமாக இருப்பதே மேல். புரிகிறதா? நான் ஒரு... தேவன் சொன்னார், தம்முடைய மக்கள் "ஒரு விசேஷித்த ஜனம், விசித்திர மானவர்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட, அழைக் கப்பட்ட; ராஜரீக ஆசாரியக்கூட்டம், தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துகிறவர்கள், அதாவது, நம் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரத்தை அவருடைய நாமத்திற்குச் செலுத்துகிறவர்கள்." 24 சிறிது காலத்திற்கு முன்பு... இந்தச் சிறிய நகைச்சுவை, இங்கிருக்கும் நல்ல ஆவியை உடைக்காது என்று நம்புகிறேன். என் நினைவுக்கு வந்தது. முழு சுவிசேஷ வர்த்தகர்கள் சங்கத்தைச் சேர்ந்த சகோதரர் ட்ராய் இதைக் குறித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். கர்த்தரிடம் புதிதாக வந்திருக்கிற இந்த இளம் பாடகருக்காக நான் இதை நினைத்தேன். அவர் ஒரு... அவர் வேலை செய்து கொண்டி ருந்தபோது... 25 அவர் ஒரு இறைச்சி வெட்டுபவர், அவர் ஒரு கசாப்புக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே ஒரு ஜெர்மானியர் இருந்தார், இவர் அவரிடம் கர்த்தரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார். அந்த ஜெர்மா னியருக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது. எனவே அவர், "சரி, கூட்டத்திற்கு வாருங்கள்" என்று சொன்னார். "உங்களுக்குப் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை" என்றார். 26 அந்த வயதான டச்சுக்காரர், தான் ஒரு லூத்தரன் என்றும், தான் சரியாக இருப்பதாகவும் இவர் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் ஒரு...?... "சரி, நீங்கள் ஒரு முறை வந்து எங்களைப் பாருங்கள்." 27 அதன்படியே அவர்கள், நாம் அழைப்பது போல, ஒருவேளை விசித்திரமானவர்கள் (oddballs) என்று அழைக்கப்படும் ஒரு கூட்டத்திற்குள் வந்தார்கள். புரிகிறதா? அன்றிரவு அந்த ஜெர்மானிய மனிதர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றார். மறுநாள் அவர் இறைச்சி வெட்டிக்கொண்டே, அந்நிய பாஷை களில் பேசிக்கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார். அவர் தனக்கென்று ஒரு வழக்கமான ஜூபிலியை (கொண்டாட்டத்தை) வைத்துக் கொண்டிருந்தார். 28 சிறிது நேரத்திற்குப் பிறகு, தொழிற்சாலையின் முதலாளி வந்து, "ஹென்றி," என்றார், "உனக்கு என்ன ஆயிற்று?" அவர், "ஓ தேவனுக்கு மகிமை உண்டாவதாக" என்றார். அவர், "நான்-நான் இரட்சிக்கப்பட்டேன்" என்றார். 29 அதற்கு அவர், "ஏன்," என்றார், "நீ எங்கே போயிருந்தாய்?" "நீ அந்தப் பைத்தி யக்காரக் (nuts) கூட்டத்தோடு போயிருந்திருக்க வேண்டும்," என்றார். 30 அவர் சொன்னார், "ஆம், தேவனுக்கு மகிமை உண்டாவதாக!" அவர் சொன்னார், "நான்-நான் அந்தப் பைத்தியக்காரக் (nuts) கூட்டத்துடன் தான் இருந்தேன்." அவர் சொன்னார், "உங்களுக்குத் தெரியுமா, அந்த-அந்த-அந்த 'நட்கள்' (nuts - மரையாணிகள்/ பைத்தியங்கள்) இல்லையென்றால்..." என்றார். "நீங்கள் ஒரு காரை எடுத்துக்கொள்ளுங்கள், அது சாலையில் வருகிறது. அதிலுள்ள 'நட்' (nuts - மரையாணிகள்) எல்லாவற்றையும் கழற்றி விட்டால், உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் குப்பைதானே!" அது முற்றிலும் சரி, நீங்கள் எதிலிருந்து 'நட்களை' (nuts) எடுத்தாலும் அப்படித்தான். பாருங்கள், ஒரு விஷயத்தை ஒன்றாக இணைத்து வைத்திருக்க அது தேவைப்படுகிறது. 31 உலகம் அப்படிப்பட்ட ஒரு நிலையில், குழப்பத்தில் இருக்கிறது, மேலும் சபை உலகப்பிரகாரமான மற்றும் மதப்பிரிவு விஷயங்களில் விற்கப்பட்டுவிட்டது, எனவே விஷயங்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க சில சமயங்களில் ஒரு 'நட்' (nut - பைத்தியம்/ மரையாணி) தேவைப்படுகிறது. அதுதான் சரி. அது அவர்களிடம் இல்லையென்றால், அது நம்மிடம் இல்லை, நம்மிடம் சபை இல்லை. 32 இப்போது, நாம் அந்தத் தலைப்பைப் பற்றிச் சில நிமிடங்கள் சிந்திக்கலாம். பவுல் சொன்னார், "நான் ஒரு புத்தியீனனாகிவிட்டேன், அல்லது ஒரு 'நட்' (பைத்தியம்) ஆகிவிட்டேன், எதற்காகவென்றால்..." பாருங்கள், நீங்கள் யாருக்காவது ஒரு 'நட்'டாக (பைத்தியமாக) இருக்க வேண்டும். நீங்கள் உலகத்திற்காக ஒரு பைத்தியமாக இருக்கலாம் அல்லது கிறிஸ்துவுக்காக ஒரு பைத்தியமாக இருக்கலாம். 33 ஒரு நாள் கலிபோர்னியாவில், நான் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவர் முன்புறத்தில் ஒரு பலகையை வைத்திருந்தார், அதில், "நான் கிறிஸ்துவுக்காக ஒரு பைத்தியம்" (I am a fool for Christ) என்று எழுதியிருந்தது. அவருடைய முதுகில் இருந்த பலகையில், "இப்போது, நீங்கள் யாருடைய பைத்தியம்?" (Now, whose fool are you?) என்று எழுதியிருந்தது. புரிகிறதா? எனவே, நாங்கள் அவரிடம் அதைக் குறித்துக் கேட்டோம். அவர், "நீங்கள் யாருக்காவது ஒரு பைத்தியமாக இருக்க வேண்டும்" என்றார். 34 எனவே இங்கே பவுல், கிறிஸ்துவுக்காக ஒரு பைத்தியமாக இருப்பதைத் தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில் உலகம் அவரைப் பற்றி எப்படி நினைத்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியும்; உலகம் மட்டுமல்ல, சபையும் கூட. அந்த மனிதர் ஒரு ஆசாரியராகப் பயிற்றுவிக்கப்பட்டவர். அவர் கமாலியேலின் கீழ், அந்நாட்களில் இருந்த மிகச்சிறந்த அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒருவரின் கீழ் பயிற்றுவிக்கப்பட்டார். அவர் ஒருவேளை, தன்னுடைய கலை இளங்கலை (Bachelor of Art) மற்றும் முனைவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு, ஆசாரியத்துவத்திற்கு அழைக்கப்படத் தயாராக இருந்திருக்கலாம், ஒருவேளை அந்த இளைஞனிடம் இருந்த உற்சாகத்தினால் ஒருநாள் அது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் திடீரென்று, ஏதோ ஒன்று நடந்ததினால், அதையெல்லாம் மாற்றிக்கொண்டார். அவர் தமஸ்கு செல்லும் வழியில் கிறிஸ்துவைச் சந்தித்தார். 35 அதன் பிறகு, உலகத்திற்கு அவர் ஒரு பைத்தியமாக இருந்தார், சபைக்கு அவர் ஒரு பைத்தியமாக இருந்தார். மதப்பிரிவு சபைக்கு அவர் உண்மையில் ஒரு பைத்தியமாக இருந்தார். அதைத்தான் அவர் இங்கே சொன்னார், அவர் ஒரு புத்தியீனனாகிவிட்டார். அவர் அந்த மக்களுக்கு ஒரு பைத்தியம், ஆனால் சபை ஒன்றாக இருப்பதற்கு, அன்றைய நாட்களில் இருந்த சரீரம் ஒன்றாக இருப்பதற்கு, தேவன் பயன்படுத்திய கருவி அவர்தான். அந்த-அந்த நிமித்தமாக அவர் ஒரு புத்தியீனரானார். 36 நோவாவைக் குறித்து நாம் கற்பனை செய்யலாம், சகோதரன் அவரைப் பற்றி இங்கே பாடினார், "தேவன் தம் அன்பை ஒரு புறாவின் சிறகுகளில் அனுப்பியபோது," எனக்குப் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. அதை வாசிக்கக்கூடிய யாராவது ஒருவரைப் பெற நான் எப்போதும் விரும்பினேன். நான் அதைப் பற்றிப் பேச விரும்பினேன். 37 ஒருமுறை நான் ஒரு கதையைப் படித்தேன், சில வீரர்கள் முடக்கப்பட்டி ருந்தார்கள், எதிரிகள், முதல் உலகப் போரில் ஜெர்மானியர்கள் அவர்களை முடக்கி யிருந்தார்கள். செய்தியைக் கொண்டு செல்ல அவர்களிடம் ஒரு சிறிய புறா இருந்தது. அந்த... அது ஒரு வகையான புறாதான், நிச்சயமாக. அது புறா வகைகளில் ஒன்று. அவர்கள் அந்தச் செய்தியை அந்தச் சிறிய புறாவின் மேல் வைத்தபோது, அது காற்றில் பறந்தது. எல்லா திசையிலிருந்தும் தோட்டாக்கள் அதை நோக்கிச் சுடப்பட்டன, ஏனென்றால் அது என்னவென்று அவர்களுக்குத் தெரியும். அது அதன் காலில் காயத்தை ஏற்படுத்தியது. அதன் சிறிய கால்கள் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. அதன் சிறகுகளிலிருந்த இறகுகள் சுடப்பட்டிருந்தன. அது காற்றில் பக்கவாட்டிலும், எல்லா விதமாகவும் திரும்பிக்கொண்டிருந்தது. ஆனால் அது விழ வேண்டிய முகாமில் சரியாக விழுந்தது, அவர்களுக்கு உதவி கிடைத்தது. 38 நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும், அங்கிருந்து அது தொடர்கிறது. புரிகிறதா? ஒரு நாள் நாமும் அப்படித்தான் இருந்தோம், உங்களுக்குத் தெரியும். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங் களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், ஆனாலும் செய்தி இங்கே வந்து சேர்ந்தது. அவர் செய்தியை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தார். 39 நோவா, அவருடைய நாட்களில். தேவனால் நிரூபிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரி சியாகிய அவருடைய தகுதியை உடைய ஒரு மனிதரை நான் கற்பனை செய்கிறேன். ஒரு நாள் தேவன் அவரிடம் பேசினார். ஒரு பெரிய அறிவியல் யுகத்தில் அது எவ்வளவு விசித்திரமான ஒரு காரியமாக இருந்தது. ஒருவேளை அவர்கள் தங்கள் ரேடார் மூலம் சந்திரனைச் சுட முடிந்திருக்கலாம், அவர்கள் ஸ்பிங்க்ஸ் மற்றும் பிரமிடை கட்டியிருக்கலாம். தேவன் அவரிடம் பேசி, "நோவா, வானத்திலிருந்து தண்ணீர் மழையாகப் பெய்யப் போகிறது" என்று சொன்னார். அவருடைய தகுதியுள்ள ஒரு மனிதர், கர்த்தருடைய தீர்க்கதரிசி, இப்படிப்பட்ட ஒரு அபத்தமான செய்தியை எடுத்துக்கொண்டு வெளியே சென்று, அதைச் சொல்வார் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? 40 நினைவில் கொள்ளுங்கள், அந்நாட்களில் வானத்திலிருந்து மழை பெய்ததே இல்லை. தேவன் பூமியை வாய்க்கால்கள் மற்றும் ஊற்றுகள் மூலம் நீர்ப்பாசனம் செய்து தண்ணீர் பாய்ச்சினார் என்று வேதம் சொல்கிறது. ஒரு துளி மழை கூட பெய்ததில்லை. மேலே தண்ணீர் இல்லை. எனவே மேலே தண்ணீர் இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தது. 41 ஆனால் ஒரு மனிதர் ஒரு செய்தியோடு வந்தார். அதுமட்டுமல்லாமல், உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தன்னைத்தானே பிரித்துக் கொண்டார். அவர் உலகத்திற்கு ஒரு 'நட்' (பைத்தியம்) ஆனார். அதுதான் சரி. அவர் தன் காலத்தின் ஒரு பைத்தியமாக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரச் செய்தியைக் கொண்ட ஒரு மனிதர், மக்களை ஒரு சிறிய பெட்டிக்குள், அல்லது ஒரு பேழைக்குள், அல்லது அவர்கள் அங்கே கட்டிக்கொண்டிருந்த எதுவாக இருந்தாலும் அதற்குள் கொண்டு வர எப்படி முயற்சிப்பார்? அவர்-அவர் உண்மையில் ஒரு புத்தியீனமான மனிதராக இருந்தார். 42 ஆனால் அவர் என்ன செய்தார்? அப்படிச் செய்ததினால், அந்நாட்களில் விசுவாசமுள்ள சபையைக் காப்பாற்றிய 'நட்' (பைத்தியம்) அவர்தான். ஆம், ஐயா. அதுதான் நடந்தது. அவர் அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்து எங்கே வர முடியும், எங்கே அவர்களை அழைத்துச் செல்ல முடியும் என்று அவருக்குத் தெரிந்ததோ, அந்த இடத்தை அவர் ஆயத்தம் பண்ணிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பைத்தியமானார். 43 உங்களால் மோசேயை அவருடைய நாளில் கற்பனை செய்ய முடியுமா, ஒரு பெரிய அறிவுஜீவியிடம் செல்லும் ஒரு மனிதர்? [ஒலி நாடாவில் காலியிடம்] அந்த நேரத்தில் அவர்கள் உலகத்தை வென்றிருந்தார்கள். அவர்களுடைய அறிவியலும் கலைகளும், உண்மையில், இன்றைக்கு நம்முடையதை விட மேலாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுடைய கட்டிடக் கலையின் மேன்மையும், அக்காலத்தில் அவர்கள் செய்த பெரிய காரியங்களும் அப்படிப்பட்டவை. 44 அவர்கள் நம்பாத ஒரு தேவனை, எரியும் புதரில் சந்தித்ததாகச் சொல்லிக்கொண்டு ஒரு மனிதன் அங்கே வருவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அவர் கீழே வந்தார்... ஆரம்பத்தில் அவர் ஒரு இராணுவ மனிதராக, இராணுவ உலகின் எல்லா விதமான போர் உத்திகளிலும் பயிற்றுவிக்கப் பட்டவராக இருந்தார். ஆனால் உலகத்தைச் சிறைபிடித்து வைத்திருந்த ஒரு தேசத்திலிருந்து மக்களை விடுவிக்க, அவர் கையில் ஒரு கோலை வைத்துக்கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம். 45 பார்வோனுக்கு அவர் ஒரு பைத்தியம் (nut). அவ்வளவுதான். "அவன் பைத்தியக் காரன்." "அவனைச் செய்ய விடுங்கள், போகட்டும், பிதற்றட்டும். அவன் பைத்தியம் என்று அவனே அறிவித்துக்கொள்வான்" என்று சொன்னார்கள். உண்மையில் பார்வோனுக்கும், அவனுடைய பெரிய அறிவியல் உலகத்திற்கும், அவர் ஒரு விசித்திரமானவர் (oddball). அவர் அவர்களுக்கு ஒரு பைத்தியம். புரிகிறதா? அவர் அப்படித்தான் இருந்தார். 46 ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் மக்களையும் விடுவித்தார், ஏனென்றால் அவர் தேவனால் அனுப்பப்பட்டவர். அதற்குச் சில விசித்திரமான காரியங்கள் தேவைப்பட்டன, உலகத்தின் மற்ற காரியங்களிலிருந்து வித்தியா சமான ஒன்று தேவைப்பட்டது. பாருங்கள், உலகம் அவர்களின் பெரிய அறிவியல் சாதனைகள் மற்றும் பிறவற்றில் ஒரே மாதிரியாகச் செல்கிறது. ஆனால் ஒரு மனிதன் தேவனால் நடத்தப்பட்டு, அதற்கு முரணான ஒன்றைச் செய்யும்போது, அவன் ஒரு புத்தியீனனாகிறான். "அவன் பைத்தியம்." ஆனால், பாருங்கள், விஷயத்தை ஒன்றாக இணைத்து வைக்க அப்படிப்பட்ட ஒன்று தேவைப்படுகிறது. 47 எலியாவைப் பற்றி அவருடைய நாட்களில் நாம் நினைக்கிறோம். ஆகாபும் இஸ்ரவேலும் இருந்த அந்த நேரத்தில், இந்த ஆகாபின் ஆட்சியின் கீழ் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு தேசமும் அவர்களுக்குப் பயந்திருந்தது. ஆகாப் ஒரு பெரிய மனிதன். அது ஒரு பெரிய காலம், இப்போது நாம் கொண்டிருப்பதைப் போன்ற ஒன்று. சபை முழுவதும் நாகரீகமாக மாறியிருந்தது. புரிகிறதா? அது யேசபேலின் வர்ணப்பூச்சு, ஆகாபின் உலகத்தன்மை, சமரசம் செய்து கொள்வது, அவர்கள் தேவனுடைய பலி பீடங்களை இடித்துப் போட்டார்கள். "ஓ, நீங்கள் ஒரு தெய்வத்தை வணங்குகிறீர்கள் என்றால், என்ன வித்தியாசம் இருக்கிறது? புரிகிறதா? நாம் தோப்புகளுக்குச் செல்லலாம், நீங்கள் விரும்பும் எந்தத் தெய்வத்தையும் வணங்கலாம்" என்று சொன்னார்கள். 48 இன்றைக்கும் அப்படித்தான் இருக்கிறது, பாருங்கள், எல்லாம் நாகரீகங்கள், ஆடைகள், உலகத்தின் காரியங்கள். "ஓ, நீங்கள் இதைச் சேர விரும்பினால், அதைச் சேருங்கள், இதைச் சேருங்கள், அதைச் சேருங்கள், எல்லாம் ஒன்றுதான். புரிகிறதா? நீங்கள் சபைக்குச் செல்லும் வரை, எந்த வித்தியாசமும் இல்லை." 49 நான் எதைச் சேர்ந்தவன் என்பதும், எந்த தேவனைச் சேவிக்கிறேன் என்பதும், அவரை எப்படிச் சேவிக்கிறேன் என்பதும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நான் அவரைச் சேவிக்க அவர் ஒரு வழியை வைத்திருக்கிறார், அவர் அதை இந்த வார்த்தையில் எழுதியிருக்கிறார். நாம் அவரைச் சேவிக்க வேண்டிய விதம் அதுதான். புரிகிறதா? இப்போது, அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 50 ஆனால் எலியா அப்படிப்பட்ட ஒரு செய்தியுடன் அங்கே வந்தபோது, உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அவர் பார்வோனுக்கு, அல்லது... மன்னிக்கவும். ஆகாபுக்கு ஒரு பைத்தியமாக (nut) ஆனார், அவர் ஒரு வழக்கமான... தன்னைத்தானே பிரித்துக்கொண்டார்! ஆனால், பாருங்கள், அந்த மக்களிடையே ஏழாயிரம் பேர் இருந்தார்கள், அவர்கள் இரட்சிக்கப்பட முடியும். புரிகிறதா? அவர் அவர்களுக்காக வந்தார். அவர்களைப் பிடிக்க அவர் உலகத்திற்கு ஒரு பைத்தியமாக மாற வேண்டியிருந்தது. நோவாவும் அப்படித் தான், தன்னோடு கூட எட்டு ஆத்துமாக்களைப் பிடிக்க உலகத்திற்கு ஒரு பைத்தியமாக மாற வேண்டியிருந்தது. புரிகிறதா? அவர் ஒரு விசித்திரமான நபராக மாற வேண்டியிருந்தது. 51 ஆமோஸ், அவர் தன் செய்தியைக் கொண்டு வந்த நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தார். சமாரியா உலகத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தபோது அவர் அங்கே வந்தார் என்பதை நாம் காண்கிறோம். தெருக்களில் இருந்த பெண்கள் கிட்டத்தட்ட பொது விபச்சாரிகளாக மாறியிருந்தார்கள். நாகரீகங்கள், அது ஒரு நவீன ஹாலிவுட்டாக இருந்தது. அறியப்படாத வழுக்கைத் தலையு டைய அந்தச் சிறிய மனிதர், ஒரு காலை வேளையில் மலையின் மேல் எழும்பி, சமாரியாவைக் குனிந்து பார்த்து, அது பாவத்தில் இருப்பதைக் கண்டபோது, அவருடைய இருதயம் கிட்டத்தட்ட நின்றுபோயிருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். 52 அவருக்குத் தெரிந்ததெல்லாம், அவர் ஒரு மந்தை மேய்ப்பவராக இருந்தார் என்பது மட்டும்தான். அவர் உண்மையில்... கர்த்தர் அவருக்கு இந்தச் செய்தியை மட்டுமே கொடுத்து அங்கே அனுப்பினார். ஆனால் இப்போது அவருக்கு எந்த ஆதரவும் இல்லை. அவரை ஆதரிக்க அவருக்கு யாரும் இல்லை. ஆனால் இந்தச் செய்தியை மக்களுக்குக் கொண்டுவரவும், அவர்களை நியாயத் தீர்ப்பிலிருந்து வெளியே அழைக்கவும் அவர் தேவனால் நடத்தப்பட்டுச் சென்றார். 53 சரி, இப்போது, அந்தப் பெரிய அறிவியல் யுகத்திற்கும், கவர்ச்சி யுகத்திற்கும், இன்றைய காலத்தைப் போன்றே, ஆமோஸ் ஒரு விசித்திரமானவராக (oddball) ஆனார் என்று நான் கற்பனை செய்கிறேன். புரிகிறதா? அவர் ஒரு புத்தியீனரானார், அவர்கள் அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்ப வில்லை. ஆனால், அவரிடம் 'கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்' என்கிற செய்தி இருந்தது. புரிகிறதா? விடுவிக்கப்படக் கூடியவற்றை அவர் விடுவித்தார். 54 யோவான் ஸ்நானகன், அவருடைய நாட்களில் வந்தபோது, அந்தப் பெரிய மத உலகம், இது போன்ற ஒரு வனாந்தரத்திலிருந்து, யூதேயாவின் வனாந்தரத்தில் உள்ள பாறைகள் மற்றும் இடங்களிலிருந்து வெளியே வந்தது. அவர் ஒரு ஆசாரியரைப் போல உடை உடுத்தவில்லை. அவர் ஒரு சாதாரண உழைக்கும் மனிதனின் முரட்டுத் துணிகளை அணிந்திருந்தார், ஒருவேளை, தன்னைச் சுற்றி ஒரு ஆடையை அணிந்திருந்தார், அவர் ஏதோ பெரிய இறையியல் கல்லூரி ஆசிரியர் அல்லது அது போன்றவர் அல்ல. ஆனால் அவர் தன் கைகளால் வேலை செய்யக்கூடிய ஒரு சாதாரண மனிதர். அவர் வனாந்தரத்திலிருந்து கீழே வந்தபோது, ஆட்டுத்தோல் தன்னைச் சுற்றிக் கட்டியிருந்தது, அவரிடம் 'கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்' என்ற செய்தி இருந்தது, ஏனென்றால் மேசியாவின் காலம் அப்போது தான் என்பதை அவர் அறிந்திருந்தார். 55 தேவனுடைய வார்த்தையில் அவர் தன்னை முழுமையாக அடையாளம் கண்டுகொண்டார். நினைவில் கொள்ளுங்கள், மல்கியா 3-ம் அதிகாரத்தில், கர்த்தருடைய வருகைக்கு முன்னதாக வரும் தூதுவனாக அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். வருகை மிகவும் நெருக்கமாக இருப்பதை அவர் அறிந்திருந்ததால் அவர் வெளியே வர வேண்டியிருந்தது. மக்கள் அவர் ஒரு காட்டு மனிதர் என்று நினைத்தார்கள், வெறும் ஒரு பைத்தியம் (fool). புரிகிறதா? 56 இன்று நாம் அதை ஒரு "நட்" (nut - பைத்தியம்) என்று அழைக்கிறோம். "நட்" என்ற வார்த்தையை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், நான் பயன்படுத்த விரும்பும் அர்த்தத்திற்கு அது ஒரு நல்ல வார்த்தை, ஏனென்றால் இன்றைய தெருக்களில் அப்படித்தான் பயன்படுத்துவார்கள். "வெறும் ஒரு சாதாரண பைத்தியம் (nut)" என்று நாம் அவரை அழைப்போம். 57 சரி, இங்கே யோவான் ஸ்நானகன் இருக்கிறார். அவர் அந்த வனாந்தரத்திலேயே தங்கியிருந்து, யோர்தான் நதிக்கரையோரம் ஏறியும் இறங்கியும் நடந்து, தன் சிறிய பிரசங்கங்களைப் பிரசங்கித்து, "காலம் நெருங்கி விட்டது! வெளியே வாருங்கள், உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். மேசியா வருகிறார்!" என்று அழுதுகொண்டே கூப்பிட்டார். ஆசாரி யர்கள் மற்றும் அவர்கள் அனைவரும், அவர் ஒரு வழக்கமான பைத்தியமாக (nut) ஆகிவிட்டார் என்று நினைத்திருப்பார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். அவ்வளவுதான். பாருங்கள், அவர் அப்படித்தான் இருந்தார், ஒரு விசித்திரமானவர் (oddball). அவரைப் பின்பற்றியவர்கள் விசித்திரமானவர்களாக, வெறு மனே புத்தியீனர்களாக (fools) மாறினார்கள். 58 நம்முடைய கர்த்தர் வந்தபோது அவரும் அப்படியே அழைக்கப்பட்டார் என்பது உங்க ளுக்குத் தெரியுமா, ஒரு பைத்தியக்காரர்? புரிகிறதா? அவர் நகரங்களுக்குள்ளே செல்ல வில்லை, பெரிய அமைப்புகளோடும் காரியங் களோடும் இணையவில்லை. அவர் ஒரு மக்களை அழைத்துக் கொண்டிருந்தார். அவர் வெளியே அழைத்துக் கொண்டிருந்தார். அவருடைய நாளில் இருந்த மதவாதிகளால், அவர் ஒரு பைத்தியமாக (nut) கருதப்பட்டார். 59 பவுல் அவருடைய நாளில் எப்படி இருந்தாரோ அதுபோல, ஒரு பயிற்சி பெற்ற மனிதராக இருந்தும், உலகத்தின் மற்ற பகுதிகளி லிருந்தும், மதப்பிரிவுகளிலிருந்தும் தன்னைத் தானே பிரித்துக்கொண்டு, ஒரு மக்களை அழைக்க முயற்சிப்பது போன்ற ஒரு காரியத்தைச் செய்தார். அவர் புறஜாதி சபைக்கு ஒரு அப்போஸ்தலராக இருந்தார். புறஜாதி சபைக்கு அவர்தான் நம்முடைய அப்போஸ்தலர் என்பதை நாம் அறிவோம். ரோம அந்நிய வழிபாடுகளிலிருந்தும், அந்நாட்களின் பாகால் வழிபாடுகளிலிருந்தும் புறஜாதி சபையை வெளியே கொண்டு வந்த 'நட்' (பைத்தியம்) அவரே. 60 மார்ட்டின் லூதர், கத்தோலிக்கச் சபைக்கு அவர் ஒரு பைத்தியமாக (nut) இருந்தார். புரிகிறதா? சபையின் போதனைகள் அனைத் தையும் தூக்கி எறிந்துவிட்டு, "இது கிறிஸ்துவின் சரீரம்" என்று சபை சொன்னதால், இந்தக் கம்யூனியனை (திருவிருந்து) கொடுக்க மறுத்த ஒரு ஆசாரியரை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கன்னியாஸ்திரீகளும் மற்றவர்களும் அதை அங்கே உள்ளே புனிதமாக்கியிருந்தார்கள் என்பது அவருக்குத் தெரியும். அது கிறிஸ்து அல்ல என்பது அவருக்குத் தெரியும். அது ஒரு துண்டு ரொட்டி, பாருங்கள், ஒரு சிறிய சர்க்கரை அப்பம். அந்த திராட்சரசமானது கிறிஸ்துவின் உண்மையான இரத்தம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். அது அதை அடையாளப்படுத்துகிறது அவ்வளவே. எனவே, அவர் தனது நேர்மையான நம்பிக்கையில் அதைத் தூக்கி எறிந்தார், அதோடு இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள அவர் விரும்ப வில்லை. புரிகிறதா? அவர் அதை முடித்துவிட்டார். 61 இப்போது, அநேகமாக கத்தோலிக்கச் சபை சொல்லியிருக்கும், "ஓ, அவனை விட்டுவிடுங்கள். அவரிடம் எவ்வளவு சிறிய கூட்டம் இருக்கிறது என்று பாருங்கள். அவன் என்ன? அவரிடம் இருப்பது ஒரு பொய்யான ஒன்று. நாங்களோ, ஒரு பெரிய சபை. அவ்வளவுதான். அது ஒரு சாதாரண விஷயம்." ஆனால், பாருங்கள், சீர்திருத்தத்தில் அதை ஒன்றாக இணைத்து வைத்திருந்த 'நட்' (பைத்தியம்/மரையாணி) அவர்தான். அவர் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 62 அவர் அமைப்பை உருவாக்கி ஒரு நிலைக்கு வந்த பிறகு... அவருடைய மரணத்திற்குப் பிறகும், அவர் பிரசங்கித்த செய்தி முடிந்த பிறகும், சபை மீண்டும் மிகவும் குளிர்ச்சியாகவும் விறைப்பாகவும் மாறியது, அப்போது தேவன் ஜான் வெஸ்லி என்று அழைக்கப்பட்ட மற்றொரு 'நட்'டை (பைத்தியத்தை) எழுப்பினார். அதுதான் சரி. அவர் ஆங்கிலிகன் சபைக்கு ஒரு பைத்தியமாக (nut) இருந்தார். புரிகிறதா? ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் உலகத்தை, உலகத்தில் இருந்த சபையை இரட்சித்தார் என்று நான் சொல்லலாம். அவர் உலகத்தில் இருந்த சபையை இரட்சித்தார். ஏன்? ஒரு பைத்தியமாக (nut) மாறுவதன் மூலம். அதுதான் சரி. அவர் இரட்சித்தார். 63 அதன் பிறகு என்ன? இப்போது, அவருடைய காலத்திற்குப் பிறகு நாம் வருகிறோம், பெரிய வெஸ்லியன் காலம் கடந்து சென்றது, பிறகு ஜான் ஸ்மித்திலிருந்து பாப்டிஸ்டுகள் வந்தார்கள், பிறகு அலெக்சாண்டர் கேம்ப்பெல் வந்தார்கள், நாசரேயனைச் சேர்ந்த பட்டி ராபின்சன் வந்தார்கள். கடைசியில் அது உண்மையான தண்டிலிருந்து விலகிச் சென்றுகொண்டே இருந்தது. 64 பிறகு தேவன் மற்றொரு பைத்தியக்காரக் கூட்டத்தை (bunch of nuts) எழுப்பினார்: பெந்தேகோஸ்தே. அவர்கள் மக்களுக்கு ஒரு பைத்தியமாக (nut) மாறினார்கள். உலகத்திற்கு அவர்கள் பைத்தியங்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஒரு பெரிய வேலையைச் செய்தார்கள். பெந்தேகோஸ்தே காலத்தில் அவர்கள் நிச்சயமாகச் செய்தார்கள். 65 இப்போது, இப்போது, மற்றொரு 'நட்' (nut - பைத்தியம்) எழும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? நான் நினைக் கிறேன்... பெந்தேகோஸ்தே உலகம் போன அதே வழியில் சென்றுவிட்டது. ஆனால் மற்றொரு 'நட்'டுக்கு இது நேரம். புரிகிறதா? எனவே நாம் இந்தக் கிளையின் இப்பக்கத்தில் கொஞ்சம் இழுக்க வேண்டியிருந்தால், நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நாங்கள் எங்களை எப்படிப் பிரித்துக்கொண்டோம், நீங்கள் இங்கே இருப்பது போல, நாங்கள் மிகவும் விசித்திரமானவர்கள் மற்றும் வித்தியாச மானவர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். நாம் பிரிக்கப்படவில்லை. நாம் ஒன்று. புரிகிறதா? பாருங்கள்? நாம் இருக்கும் விதத்தில், நாம் உலகத்திலிருந்து எங்களைப் பிரித்துக்கொண்டோம். 66 சகோதரன் லியோ, இங்கே வர நடத்தப்பட்டார், அங்கே... வளர்க்கப்பட வேண்டிய சிறு பிள்ளைகள் உங்களுக்கு இருக்கிறார்கள். பாருங்கள்? உலகத்தின் வழியில் நடக்க விரும்பாத பெண்கள், இளம் பெண்கள் இங்கே உங்களுக்கு இருக்கிறார்கள். வயதான மற்றும் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆண்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் அமைதியாகத் தங்கி, தங்கள் வீட்டைப் போல உணரக்கூடிய ஒரு இடத்தை விரும்புகிறார்கள். உங்கள் சொந்த வகையான மக்களிடையே நீங்கள் வசிக்கிறீர்கள். சரி, பாருங்கள், அதைக் கவனித்துக்கொள்ள தேவன் ஏதோ ஒன்றை எழுப்ப முடியும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? அவர் அதைச் செய்கிறார் என்று நான் முழு இருதயத்தோடும் நம்புகிறேன். 67 இப்போது, நாம் பார்க்கிறோம், இப்போது நேரம் வந்துவிட்டது. கவனியுங்கள், 'நட்' (nut - மரையாணி/பைத்தியம்) தான் எப்போதும் அவர்களை ஒன்றாக இழுத்துப் பிடித்திருக்கிறது. 68 இன்றைய எல்லா அமெரிக்கர்களைப் போலவும், நம்முடைய சபைகளிலும், நம்முடைய மதப்பிரிவுகளிலும், காரியங்களிலும் உலகத்தன்மை மற்றும் காரியங்கள் அதிகமாக இருப்பதை நாம் காண்கிறோம். வார்த்தையின் அடிப்படையில் ஏதோ ஒன்று எழும்பட்டும். பாருங்கள், அவர்கள் வார்த்தையை விட்டுவிட்டு விசுவாசப் பிரமாணங்களுக்குச் சென்று விட்டார்கள். வார்த்தையோடு ஏதோ ஒன்று எழும்பட்டும். 69 நீங்கள் சொல்கிறீர்கள், "சரி, நீங்கள் உங்களைப் பிரித்துக்கொண்டீர்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்." நான் உங்கள் போதகரிடமும், நம் சகோதரன் லியோவிடமும் பேசினேன். ஒருவர் கேட்டார், "சரி, நீங்கள் ஏன் வந்து, இதற்குள் வரக்கூடாது, அதற்குள் வரக்கூடாது?" 70 அவர் சொன்னார், "இல்லை, இல்லை." பாருங்கள், அவர்-அவர்-அவர் ஒரே ஒரு விஷயத்திற்குத் தன்னை விற்றுவிட்டார், வார்த்தைக்கு, பாருங்கள், வார்த்தைக்கு. புரிகிறதா? 71 சரி, இப்போது பாருங்கள். ஒரு மரையாணி (nut) அனுப்பப்பட்டால், அது பொருந்துவதற்கு ஒரு போல்ட் (bolt - திருகாணி) இருக்க வேண்டும். அது சரியா? இப்போது, தேவன் 'நட்களை' (nuts - மரையாணிகள்/பைத்தியங்கள்) அனுப்புகிறார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? பாருங்கள்? நான் இதைச் சற்று நேரத்தில் விளக்குகிறேன். ஆனால் ஒரு கருத்தைச் சொல்ல. அங்கே ஒரு போல்ட் (bolt) இருக்க வேண்டும், அந்த போல்ட், அந்த மரையாணிக்குப் (nut) பொருந்தும் வகையில் இழையிடப்பட்டிருக்க (threaded) வேண்டும். 72 வார்த்தையினால் இழையிடப்பட்டிருப் பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதே வழியில் இழையிடப்பட்ட ஒரு போல்ட் (bolt) இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது என்ன செய்ய வேண்டும்? உலகத்திலிருந்து மணவாட்டியை வெளியே இழுத்து, வித்தியாசமான ஒன்றிற்காக அதைத் தனியே வைப்பதே அதன் வேலை. ஆம், நண்பர்களே. உலகத்தின் காரியங் களுக்கும், உலகத்தின் மக்களுக்கும் நாம் ஒரு பைத்தியமாக (nut) இருக்கலாம், ஆனால் நாம் எதை இழுத்து வெளியே எடுக்கிறோமோ, அது இதற்காக இழையிடப்பட்டிருக்கிறது. 73 நோவா அவருடைய நாளில் இழையிடப் பட்டிருந்தார், மற்ற தீர்க்கதரிசிகளும், யுகங்கள் முழுவதிலும் அப்படியே. நீதிமான்கள் இழையிடப்பட்டிருந்தார்கள், ஏனென்றால் அவர் அதை அனுப்பினார். அது மேலே போவதற்கு ஒரு போல்ட் (bolt) இல்லையென்றால், ஒரு போல்ட் அல்லது நட் (nut) இருந்து என்ன பயன்? ஒரு போல்ட் மற்றும் நட் இணைந்து என்ன செய்ய வேண்டும்? ஏதோ ஒன்றை ஒன்றாக இழுக்க வேண்டும். புரிகிறதா? அது கிறிஸ்துவின் இழுக்கும் வல்லமை, அது உலகத்தின் காரியங்களிலிருந்து நம்மை வெளியே இழுக்கிறது. புரிகிறதா? பின்னர் நாம் பவுலின் பெரிய ஊழியத்தோடு ஐக்கியப் படுகிறோம், "நான் ஒரு புத்தியீனனாகி விட்டேன்" என்று சொல்கிறோம். எனவே நீங்கள் விசித்திரமானவர் என்று மக்கள் நினைக்கும்போது, பாருங்கள், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று தெரிகிறதா? புரிகிறதா? அவர்களுக்கு நீங்கள் ஒரு புத்தியீனராகி விட்டீர்கள், அதினாலே உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, உங்கள் இருதயத்தில் இருக்கும் ஏதோ ஒன்று எதற்காக உங்களை இழை யிட்டதோ, அந்தத் தேவனுடைய வல்லமை யினால் நீங்கள் இழுக்கப்படலாம். 74 நான் இன்று காலை கேட்கலாம், "யார் மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தேகோஸ்தே சபைகள், இது, அது மற்றும் பிற?" இங்கே எல்லா வகையான கைகளும் உயர்த்தப்படும், நாற்பது, ஐம்பது பேர். புரிகிறதா? அவ்வளவு பேர் இருப்பார்கள், எல்லோரும் வித்தியாச மானவர்கள். 75 ஆனால் நீங்கள் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? புரிகிறதா? ஏனென்றால் நீங்கள் ஏதோ ஒன்றோடு இழையிடப்பட்டிருக்கிறீர்கள். புரிகிறதா? அது வரத் தொடங்கும்போது, அது உங்களுக்குப் பொருளுள்ளதாக இருக்கிறது. பொருந்தாத ஒரு குறிப்பிட்ட வகையான போல்ட்டின் மேல் ஒரு குறிப்பிட்ட மறையைப் (thread) போட முயற்சித்தால், அது உங்களுக்குப் பொருளுள்ளதாக இருக்காது. பாருங்கள், அது-அது உள்ளே போகாது. புரிகிறதா? ஆனால் சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்று வரும்போது, அது உங்களை சிகாகோவிலிருந்து, நியூ ஆர்லியன்ஸிலிருந்து, நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் இங்கே இழுக்கிறது. புரிகிறதா? இப்போது, பாருங்கள், உலகத்திற்கு நீங்கள் நிச்சயமாக ஒரு விசித்திரமானவராக (oddball) மாறிவிட்டீர்கள். ஆனால் அது உங்களைத் தொந்தரவு செய்ய விடாதீர்கள். புரிகிறதா? அது உங்களைத் தொந்தரவு செய்ய விடாதீர்கள். 76 "நான் சரியாக இழையிடப் பட்டிருக்கிறேன் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று நீங்கள் கேட்கலாம். வார்த்தையைக் கவனியுங்கள். புரிகிறதா? இப்போது நீங்கள் சரியாக இழையிடப் பட்டிருக்கிறீர்களா, நாம் கிறிஸ்துவுக்காக பைத்தியங்களாக (nuts) இருக்கிறோமா, அல்லது உலகத்திற்குப் பைத்தியங்களாக (nuts) இருக்கிறோமா என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது உலகமும், தங்கள் 'நட்'டைப் (nut - பைத்தியம்) பெற்றுக்கொண்டது. சரியாக. 77 நான் இங்கே ஒரு சிறிய விஷயத்தை எழுதி வைத்திருந்தேன், நான் மறக்க விரும்ப வில்லை. நாம் இங்கே உட்கார்ந்திருக்கிறோம், உலகத்திற்கு போல்ட்களாகவும், நட்களாகவும் (nuts - பைத்தியங்களாக) மாறுகிறோம், சரியாகச் சொன்னால், பூமியிலே தேவனுடைய ராஜ்யத்தை நாம் ஒன்றாகப் பிடித்து வைத்திருக்கும்படியாக; பாருங்கள், தேவனு டைய ராஜ்யத்தை, ஒன்றாக. சரி. 78 நினைவில் கொள்ளுங்கள், உலகம், அவர்கள்-அவர்கள், வெளி உலகம், அவர்களுக்கும் 'நட்கள்' (nuts) இருக்கிறார்கள். இந்தப் பெரிய காரியத்தின் நாட்களில் சாத்தான் அவர்களுக்கு ஒரு 'நட்'டை (nut) கொடுக்கிறான். பாருங்கள், அது எல்லாம் சாதகமாகவும் பாதகமாகவும் செயல்படுகிறது. புரிகிறதா? இப்போது நாட்களிலே... 79 உலகத்திற்கு ஒரு 'நட்' (nut - பைத்தியம்/தலைவன்) இருந்தது, அது மோசேயின் நாட்களில் பார்வோன். அங்கே இருந்தார்கள், பாருங்கள், அங்கே இருக்க வேண்டியிருந்தது. பிசாசுக்கும் அவனுடைய 'நட்கள்' (nuts) இருக்கிறார்கள். சரி, அங்கே பார்வோன் இருந்தான். புரிகிறதா? இப்போது, இஸ்ரவேல்; அந்த மக்களை வெளியே இழுப்பதற்காக அங்கே கீழே நின்று கொண்டிருந்த மோசே, பார்வோனுக்கு ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்) இருந்தார். ஆனால் பார்வோனும் அவர்களுக்கு ஒரு 'நட்'டாக (nut) இருந்தான். புரிகிறதா? 80 எனவே அது அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் யாருடைய பைத்தியமாகவோ (nut) இருக்கிறீர்கள். வார்த்தையிலே சுற்றப்பட்டிருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீங்கள் இல்லையா, அதன் இழையோடு? யாராவது அதைப் போதிப்பார்கள். 81 ஆகாப், அவன் எலியாவுக்கும் அந்த ஏழாயிரம் பேருக்கும் ஒரு பைத்தியமாக (nut) இருந்தான். அவனுடைய கூட்டம் முழுவதும், யேசபேல் மற்றும் அவர்களுடைய பகட்டான ஆடம்பரங்கள் மற்றும் அவர்கள் வைத்திருந்த காரியங்கள், பாகாலுக்குத் தங்கள் முழங்காலை முடக்காத அந்த ஏழாயிரம் பேருக்கு ஒரு 'நட்'டாக (nut) இருந்தது. எலியாவும் அவர்களுக்கு ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்) இருந்தார், பாருங்கள், அதே விஷயம். 82 ஏரோதின் நாட்களில், யோவான் ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்) இருந்தார் என்பதை நாம் காண்கிறோம். பாருங்கள்? ஏரோதும் ஒரு 'நட்'டாக (nut) இருந்தான். உலகத்திற்கு ஒன்று இருந்தது. சரி. 83 இயேசுவின் நாட்களில், அவர் பிலாத்துவுக்கு, உலகத்திற்கு ஒரு பைத்தியமாக (fool) இருந்தார். ஆனால் அவரை நிராகரித்த பிலாத்துவும் ஒரு 'நட்' (nut) தான். அதுதான் சரி. பாருங்கள்? அவன் இழையிடப் படவில்லை. அவனுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவன் ஒரு வகையான கோமாளியை, ஒரு வகையான வித்தையை, தொப்பிக்குள் இருந்து ஒரு மந்திர முயலை வெளியே கொண்டுவருவது போன்ற ஒன்றை, உங்களுக்குத் தெரியும், அல்லது அது போன்ற ஒன்றை விரும்பினான். அவன் சொன்னான், "ஓ, நீர் சில வித்தைகளைச் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன்," உங்களுக்குத் தெரியும், அல்லது அது போன்ற ஒன்று. அவனே ஒரு 'நட்' (nut - பைத்தியம்) தான். பாருங்கள்? அதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் அவன் செய்யவில்லை. 84 சதுசேயர்களும், பரிசேயர்களும் கூட, உலகத்திற்குத் தன்னை ஒரு பைத்தியமாக்கிக் கொண்டதாகச் சொன்ன பவுலை ஏற்றுக் கொள்ளாததன் மூலம், அந்நாட்களில் அதே போல இருந்தார்கள். புரிகிறதா? 85 ஆனால் சபைக்கும் அதன் 'நட்கள்' (nuts) இருக்கிறார்கள். புரிகிறதா? உலகத் திற்கும் அதன் 'நட்கள்' (nuts) இருக்கிறார்கள். கிறிஸ்துவுக்கும் அவருடையவர்கள் இருக்கி றார்கள். புரிகிறதா? இப்போது நீங்கள் யாருடையவர்? நீங்கள் அறிந்துகொள்ளக்கூடிய ஒரே வழி... "இது சரியானது என்று எனக்கு எப்படித் தெரியும், சகோதரன் பிரான்ஹாம்?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். 86 "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்." ஆகையால், வார்த்தை இன்னும் அவராகவே இருக்கிறது. எனவே நாம் அதனோடு இழையிடப்பட்டிருந்தால், பாருங்கள். உலகத்திற்கு நாம் ஒரு பைத்தியமாக (nut) இருந்தாலும், நாம் கிறிஸ்துவின் வார்த்தையில் இழையிடப்பட்டிருந்தால், அவர் அதை ஒன்றாக இழுக்கும்போது, அவருடைய சபையை ஒன்றாக இழுக்கும்போது, கிறிஸ்து அதை வெளிப்படுத்துகிறார். அவர்கள் எழும்பி அவர்கள் விரும்பியதைச் செய்யட்டும். 87 இப்போது, மத்தேயு 24:24-ல் இயேசு சொன்னார், "கடைசி நாட்களில் இந்த இரண்டு கூட்டங்களும் மிகவும் நெருக்கமாக இருக்கும், கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்." மக்கள், இன்னும், பெந்தே கோஸ்தேவில் உள்ள மக்கள், பெந்தேகோஸ் தேவிலிருந்து வெளியே வந்த உங்களைப் பார்த்து, பாருங்கள். அவர்கள் அமைப்பை உருவாக்கி அங்கே அப்படிப்பட்ட கூட்டங்களில் சேர்ந்துகொண்டபோது, நீங்கள் அதிலிருந்து வெளியே வந்தீர்கள். பாருங்கள், "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்" என்று வேதம் சொன்னது. பாருங்கள்? "தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்," அவர்கள் தான் இதைச் செய்யத் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள்; அவர்கள்தான், பாருங்கள், அந்த போல்ட் (bolt). 88 "ஓ, அவர்களுக்கென்று அங்கே, அங்கே ஒரு 'நட்' (nut) இருக்கிறது, பாருங்கள்" என்று வந்து சொல்லாதீர்கள். பாருங்கள், அவர் இருக்க வேண்டும், போல்ட்டில் (bolt) மறைகள் (threads) வெட்டப்பட்டிருக்கும்போது, அது 'நட்'டிலும் (nut - மரையாணி) அதே வழியில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதா? அது பொருந்த வேண்டும். பாருங்கள்? மேலும் தெரிந்து கொள்ளப் பட்டவர்கள், பாருங்கள், வேறு எதனுடனும் அது இருக்காது. அது கிறிஸ்துவிடம் மட்டுமே வர வேண்டும். பாருங்கள்? அது மட்டுமே பொருந்தும். பாருங்கள்? அங்கேதான் நாம் இன்று நிற்கிறோம். தேவனுக்கு ஸ்தோத்திரம். சரி. 89 இப்போது, உலகமும் தங்கள் 'நட்'டைப் (nut) பெற்றிருக்கிறது என்பதையும் நாம் காண்கிறோம். உங்களுக்குத் தெரியும், அநேகம் சொல்லலாம். அதைச் சொல்ல நமக்கு நேரம் இல்லை, நிச்சயமாக. ஆனால், இந்த, இந்த ஒரு சிந்தனை, உங்களுக்கு. 90 சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கே பாடிய அந்தச் சிறந்த சிறிய பெண்கள் கூட்டத்தை நான் கவனித்தேன். அப்பா, அந்தப் பாடல் என்னிடம் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தப் பாடல்களை எனக்காக நாடாவில் பதிவு செய்வீர்களா? நீங்கள் அனைவரும் இங்கே பாடும்போது, எப்போதாவது ஒரு பாடலைத் தயார் செய்யுங்கள். நாடாவுக்காக நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். புரிகிறதா? நான் அதை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். பாருங்கள்? அது அழகாக இருந்தது, அப்படிப்பட்ட ஒரு உண்மையான இனிமையான ஆராதனை. 91 இப்போது, உங்களுக்குத் தெரியும், அங்கே ஒரு... இன்றைய இளையவர்கள், பெண்கள், கிறிஸ்த... கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள், சபைக்குச் செல்லும் பெண்கள், அவர்கள்-அவர்கள் திருப்திப் படுத்திக் கொள்ள ஏதோ ஒன்றை விரும்பினார்கள். சும்மா சபைக்குச் செல்வதால், தாங்கள்-தாங்கள் அதைப் பெறவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதே வேளையில் அவர்கள் தங்கள் சாட்சியைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். புரிகிறதா? "நான் மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட். நான் ஒரு கிறிஸ்தவன், பாருங்கள்" என்று தங்கள் சாட்சியைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளை உரிந்து போட விரும்பினார்கள். அவர்கள் அரைக்கால் சட்டை (shorts) மற்றும் பிகினி (bikinis), அல்லது நீங்கள் அவற்றை என்னவென்று அழைத்தாலும், அவற்றையும், எல்லாரும் பார்க்கக்கூடியவற்றையும் அணிய விரும்பினார்கள். அவர்கள்-அவர்கள் இந்தக் காரியங்களைச் செய்ய விரும்பினார்கள். அவர்கள் ஆண்களைப் போல தலைமுடியை வெட்டிக்கொள்ளவும், இந்தக் காரியங்களைச் செய்யவும் விரும்பினார்கள். 92 எனவே அவர்கள்-அவர்கள் அதைச் செய்ய விரும்பினார்கள். பாருங்கள்? இன்னும் சொல்லப்போனால், அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இயேசு சொன்னார், "அந்த இரண்டு ஆவிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும், அது தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கும்." அது நிறைவேற வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? எனவே, அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் பெறவில்லை... 93 ஒரு மனிதன் வழிபட வேண்டும். நீங்கள் எதையாவது வழிபட வேண்டும். வழிபடுவது உங்களுக்குள் இருக்கிறது. எனவே ஒரு மனிதன் எதையாவது வழிபட வேண்டும். எனவே, அவர்கள் சபையில் வழிபாடு இல்லாததால், தேவன் அவர்களுக்கு எல்விஸ் பிரெஸ்லி, பாட் பூன் என்ற 'நட்'டை (nut - பைத்தியம்) எழுப்பினார். எல்விஸ் பிரெஸ்லி ஒரு பெந்தேகோஸ்தேக்காரர் என்றும், பாட் பூன் கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்தவர் (Church of Christ) என்றும், அவர்கள் இன்னும் தங்கள் சாட்சியை வைத் திருக்கிறார்கள், பாருங்கள், முற்றிலும், 'நட்கள்' (nuts - பைத்தியங்கள்), "கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு அது நெருக்கமாக இருக்கும்" என்ற இயேசுவின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறார்கள். இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஞாயிற்றுக் கிழமை கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள், திங்கட்கிழமை ராக்-அண்ட்-ரோல் ஆடுகி றார்கள். பாருங்கள்? நம்மைப் பொறுத்தவரை, அது-அது ஒரு 'நட்' (பைத்தியம்). பாருங்கள்? அது உண்மையில் அப்படித்தான். 94 இப்போது, ஆனால், பாருங்கள், அங்கே அவருக்குச் சில சிறந்த பெண்களும் இருந்தார்கள், அவர்கள் பெண்களைப் போல நடந்து கொள்ள விரும்பினார்கள். அவர்க ளுக்குள் கண்ணியம் இருந்தது. கிறிஸ்து அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அப்படி இருக்க அவர்கள் விரும்பினார்கள். எனவே அவர்கள் சார்ந்திருக்கும் சபைக்குப் புத்தியீனமாகத் தோன்றும் ஒரு செய்தியுடன் அவர் ஒரு நபரை அனுப்புகிறார், அவர் ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்) ஆகிறார். ஆனால் பாருங்கள், அது என்னவென்றால், அது மிகச் சரியாகப் பொருந்துகிறது. நீண்ட கூந்தலைப் பற்றியும், ஒரு பெண்ணைப் போலத் தோற்றமளிப்பதைப் பற்றியும், ஒரு பெண்ணைப் போல உடை அணிவதைப் பற்றியும், ஒரு பெண்ணைப் போல நடந்துகொள்வதைப் பற்றியும் நீங்கள் பேசும்போது, இன்று காலை இங்கே இருந்த இந்தப் பெண்களைப் போல நிற்பதற்குப் பதிலாக... 95 நான் அங்கே ஒரு சிறு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் கண்கள் பரலோகத்தைப் போலத் தெரிந்தன. [ஒலி நாடாவில் காலியிடம்] ...?... கண்ணாடி போல, அவள் அப்படி மேலே பார்த்துப் பாடிக் கொண்டிருந்தாள், அவள் இருதயத்தில் ஏதோ ஒன்று இருந்தது. அந்த இளம் பெண்கள் பாடும்போது, இங்கே அவர்களைக் கவனியுங்கள். நான் நினைத்தேன், "ஓ தேவனே! ஒருவேளை ஒரு ஹாலிவுட் நட்சத்திரம் அதைத் தங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்ள முடிந்தால் என்ன நடக்கும்? அவர்களும் அதே போல இருப்பார்கள்." பாருங்கள்? ஆனால் அது என்ன? அவர்கள் ஏன் அந்த வழியில் சென்றார்கள்? உங்களால் ஹாலிவுட்டில் உள்ள அந்தப் பெண்களில் ஒருவரை இழுக்க முடியாது. நீங்கள் அவளுக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் டாலர் கொடுத்தாலும், அவள் போகமாட்டாள். ஏன்? அவள் வித்தியாசமாக இழையிடப்பட்டிருக்கிறாள். அது முற்றிலும் சரி. அவள் வித்தியாசமாக இழையிடப் பட்டிருக்கிறாள். அதுதான் சரி. 96 உங்களால் லியோ, ஜீன் மற்றும் அவர்களை ஏதேனும் ஒரு அமைப்பிற்குள் இழுக்க முடியாது. ஏன்? உங்கள் எல்லாரையும் ஒன்றிற்குள் இழுக்க முடியாது. ஏன்? நீங்கள் வித்தியாசமாக இழையிடப்பட்டிருக்கிறீர்கள். பாருங்கள்? எனவே நீங்கள் இழையிடப் பட்டிருந்தால், அதை ஒன்றாகப் பிடித்து வைக்க எங்கேயாவது ஒரு 'நட்' (nut - மரையாணி/ பைத்தியம்) இருக்க வேண்டும்!...?...பாருங்கள். அது சரிதானே? பாருங்கள்? அப்போது அது முழுமையடைகிறது. 97 அந்தச் சிறிய டச்சுக்காரர் சொன்னது போல, "'நட்களுக்காக' (nuts - பைத்தியங்கள்/ மரையாணிகள்) தேவனுக்கு ஸ்தோத்திரம். அவற்றை நீங்கள் எடுத்துவிட்டால், அது ஒரு குப்பைக் கூட்டமாக மாறிவிடும்." 98 உங்களிடம் என்ன இருக்கிறது? ஒரு மதப்பிரிவு கூட்டம், ஒரு குளிர்ந்த சடங்கு கூட்டம், அதில் கிறிஸ்துவே இல்லை, அதில் வார்த்தையே இல்லை, வெறும் விசுவாசப் பிரமாணங்களின் கூட்டம், மற்றும் பல. உங்களிடம் என்ன இருக்கிறது? 'நட்'டை (nut) எடுத்துவிட்டால், உங்களிடம் இருப்பது ஒரு குப்பைக் கூட்டம்தான், அதுதான் சரி, விறகுக் கட்டையைத் தவிர வேறொன்றுமில்லை, நியாயந்தீர்க்கவும் சுட்டெரிக்கவும், ஏதோ ஒரு நாளில் தேவனுடைய அக்கினிக்கும் தண்டனை களுக்கும் காத்திருக்கும் ஒன்று. 99 எனவே இன்று காலை இங்கே, சரியாகப் பொருந்தியிருப்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், பாருங்கள், ஆற்றின் இந்தப் பக்கத்தில் நீங்கள் ஒரு விசித்திரமான நபராக இருக்கலாம். உங்கள் மக்களில் சிலர் கூட நீங்கள் விசித்திரமானவர் என்று நினைக்கலாம். அவர்கள் அப்படி நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்திருக்கின்றன, பாருங்கள், நீங்கள் விசித்திரமானவர் என்றும், நீங்கள் வித்தியாச மானவர் என்றும், உங்களுக்கு "உலகத்தில் என்ன நடந்தது" என்றும் அவர்கள் சொன்னா ர்கள். இன்று காலை உங்களிடம் சொல்வதற்காக நான் இந்தச் சிறிய விஷயத்தைத் தேர்ந்தெடுத்தேன். பாருங்கள்? நிச்சயமாக, நீங்கள் ஒரு 'நட்' (nut - பைத்தியம்) தான். அதுதான் சரி. ஆனால் நான் ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நான் இந்த வார்த்தையோடு இறுக்கமாக இல்லாவிட்டால், நான் "குப்பை" (yunk). பாருங்கள்? நான் கிறிஸ்துவுக்காக ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்) இருப்பேன். ஆம். 100 உங்கள் மக்களில் அநேகரிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வருகின்றன. அவர்களில் சிலர் வந்து, "என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கிறார்கள். "என்ன?" 101 "இந்த விசித்திரமான ஆள்," ம்-ம், "இன்னார், அங்கே போய் இன்னின்னதைச் செய்தார்." நான் சொன்னேன், "சற்றுப் பொறுங்கள்." 102 நீங்கள் எதன் மேல் சுற்றப் பட்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. பாருங்கள்? எனவே, மந்தையின் மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உங்கள் இருதயங்களை அவரோடு இணைத்து வைத்தி ருப்பாராக, பெரிய மேய்ப்பர் வெளிப்படும் போது, நாமும் அவருடனே வெளிப்படுவோம். நாம் ஜெபிக்கலாமா? 103 பரலோக பிதாவே, நேரம் முடிந்துவிட்டதைக் கண்டு, நான் அவசரப் படுகிறேன். எவ்வளவு அன்பான, இனிமையான கிறிஸ்தவர் கூட்டம். ஆனால் எவ்வளவு முரட்டுத்தனமான ஒரு மையக்கருத்து (text); ஆனால் மறுநாள் அறையிலே, கடிதங்களில் நான் பார்த்ததையும், மக்கள் சொல்வதைக் கேட்டதையும் நினைத்துப் பார்த்தேன். நான்... உமது சிறிய ஊழியர்கள் என்னை இங்கே வந்து அவர்களைச் சந்திக்கும்படியும், சிறிய மந்தையுடன் ஐக்கியப்படும்படியும் கேட்ட போது. ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்/ மரையாணி) இருப்பதைப் பற்றிய இந்த முரட்டுத்தனமான மையக்கருத்தை, நான் அதைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன், அப்போதுதான் அந்தக் கருத்தை அவர்களுக்குக் கொண்டு செல்ல முடியும். நான் நினைப்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உலகத்திற்கு, பவுலைப் போல, நாங்களும் ஒரு புத்தியீனனாக ஆகிவிட்டோம். ஆனால் கர்த்தாவே, நாங்கள் உம்மோடும் உமது வார்த்தையோடும் மிகவும் இறுக்கமாக இருக்க விரும்புகிறோம், அப்போதுதான் எடுத்துக் கொள்ளப்படுதல் வரும்போது, நாங்கள்-நாங்கள் அதோடு இருக்க விரும்புவோம், கர்த்தாவே. எனவே கிறிஸ்துவின் அன்பில் எங்கள் இருதயங்கள் எப்போதும் பின்னப்பட்டிருக்கவும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கவும் எங்களுக்கு உதவும். 104 சகோதரன் லியோ, சகோதரன் ஜீன் மற்றும் சகோதரன் டால்டன் ஆகியோரையும், இங்கிருக்கும் இந்த நல்ல மனிதர்களையும் இந்த அருமையான பெண்களையும் ஆசீர்வ தியும். அவர்களுடைய சாட்சிகளைக் கேட்பது, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக, திருப்தியாக இருக்கிறது. அங்கே மேலே உள்ள அறைக்குள் செல்லும்போது, பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பார்க்கும்போது, அந்தப் புன்னகை களைப் பார்க்க முடிகிறது! எங்கள் சகோதரன் லியோ இங்கே மேலே நடந்து வருவது சூரிய ஒளிக்கீற்று போல இருக்கிறது என்று சொன்னதில் ஆச்சரியமில்லை. அவளுக்கு எந்த உறவும் இல்லாத, வெறும் அக்கறை மட்டுமே கொண்ட அந்த மனிதர், அவள் மகிழ்ச்சியாக இருக்கும்படி ஒரு ட்ரெய்லரை எடுத்து அமைத்ததைப் பார்க்கும் போது ஆச்சரிய மில்லை. பாருங்கள், கர்த்தாவே, அந்த இழை (thread) சரியாக வேலை செய்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்து, அநேகப் பெண்களைப் போல வெளியே ஓடவும், ஆடவும், வெட்டவும் முடியாததால், உண்மையில் சிடுமூஞ்சியாகவும், சச்சரவு செய்பவராகவும், மோசமாகவும் இருக்கக்கூடிய ஒருவரைப் பாருங்கள். ஆனால் அவள் தன் வகையானவர்களோடு இங்கே இருப்பதற்கும், தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படக்கூடிய, எந்த விசுவாசப் பிரமாணங்களும் இணைக்கப் படாத இடத்தில் இருப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்; ஆவியிலே தொழுதுகொள்ள, உண்மையாகக் கலப்படமில்லாத தேவனுடைய வார்த்தை. போன்ற ஒரு சிறிய இடத்திற்கு வருகிறோம், நாங்கள் கூடிவரும் ஒரு சிறிய ட்ரெய்லர் இது. இது சபை. "எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடிவந்திருக்கிறார்களோ, அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்." நீர் இங்கே இருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம், கர்த்தாவே, நாங்கள் உம்மைத் தொழுது கொள்ளுகிறோம், உம்மைத் துதிக்கிறோம். 105 தேவனே, நீர் நோயை அவர்களி டமிருந்து விலக்கி வைக்கும்படி நான் ஜெபிக்கிறேன். எதிரியை ஆற்றின் அக்கரையிலே வைத்திரும். இந்தப் பெரிய வெளியேறுதல் (exodus), இது ஒரு சிறிய வடிவத்தில் இருக்கலாம், ஆனால், கர்த்தாவே, ஒருநாள் இது வளரப்போகிறது. இந்தச் சிறிய வெளியே றுதலுக்காக நான் ஜெபிக்கிறேன் கர்த்தாவே, அவர்கள் யோர் தானைக் கடந்தபோதும், யோசுவா வாக்குத்தத்த தேசத்திற்குள் சென்றபோதும், மோசேயுடனும் அவர்களுடனும் நீர் இருந்தது போல, இவர்களுடனும் இருப்பீராக. 106 நீர் அவர்களுக்கு உதவும்படியும், கர்த்தாவே, அவர்களுடைய இருதயங்களை உமக்கு உண்மையாக, உத்தமமாக வைத்துக்கொள்ளும்படியும் நான் ஜெபிக்கிறேன். அவர்கள் வார்த்தையைப் போதிக்கும்போது அவர்களை ஆசீர்வதியும். அவர்கள் நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழட்டும். ஒருவேளை, நீர் வரும்போது நாங்கள் பூமியில் இங்கே வசித்துக்கொண்டிருந்தால், கர்த்தாவே, அங்கே கிளையின் இப்பக்கத் திலிருந்து ஒரு ஆரவாரம் உண்டாகி, சபை மேலே போவதாக. அதை அருளும், கர்த்தாவே. ஏனென்றால், நீர் வரும் வரை அதை ஒன்றாகப் பிடித்து வைக்க, உலகத்திற்கு ஒரு 'நட்'டாக (nut - பைத்தியம்) மாறும் அளவுக்கு யாரோ ஒருவர் புத்தியீனராக இருந்தார் கர்த்தாவே. 107 பின்னர், கடந்த நாட்களிலிருந்த பழைய யோவானைப் போல. அந்தச் சிறிய பெண்கள் பாடியது போல, "நாங்கள் பிரிந்துவிட்டோம்." அவர் எப்படித் தனியாக இருக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் அப்படி இருந்த போது, அவர் ஒன்றாகச் சேர்த்த சிறிய சபை... அவர் இயேசுவைக் கண்டபோது, "இப்போது என் வேலை முடிந்தது. அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்" என்று சொன்னார். 108 பிதாவே, நீர் எங்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்படி நான் ஜெபிக்கிறேன். நாங்கள் பூமியில் இன்னும் பல முறை சந்தித்து, உம்மை நேசித்து, உமக்குச் சேவை செய்வோமாக. உமது தெய்வீக ஆசீர்வாதங்கள் இந்த ஆராதனையின் மீதும், தொடர்ந்து வரும் ஆராதனைகளின் மீதும் தங்கியிருப்பதாக. நாம் அனைவரும் இந்த வாழ்க்கையிலும், வரவிருக்கும் வாழ்க்கையிலும், வரவிருக்கும் அந்தப் பெரிய யுகத்தில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி வாழ்வோமாக, அங்கே அந்தப் பெரிய ஆயிரவருட அரசாட்சியில் நாம் அவரைக் காண்போம், அவருடைய முகத்தைப் பார்த்து, அவரைக் காண்போம். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 109 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் மக்களே. நானும் அப்படிப்பட்ட ஒரு மையக்கருத்தை, பாருங்கள், அப்படிப்பட்ட ஒரு முரட்டுத்தனமான ஒன்றை எடுத்ததற்காக மிகவும் வருந்துகிறேன். ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். பாருங்கள்? எனவே, நீங்கள் விசித்திரமானவர் என்று யாராவது சொல்லும் போது, நீங்கள் ஏன் விசித்திரமானவர் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் லியோ. ~ 64 ~